×

நாமக்கல் நூலாசிரியருக்கு தமிழ்ச்செம்மல் விருது

நாமக்கல், மார்ச் 8: நாமக்கல் பொய்யேரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் பரணிராஜா (79). இவர் பல்வேறு நாவல்கள் மற்றும் நூல்களை எழுதியுள்ளார். கடந்த 10 ஆண்டுக்கு முன்பு, உறவுகள், என் உயிர் மூச்சு என்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு நூலை எழுதினார்.

இந்நூலை படித்து பார்த்த பொது நூலகத்துறை அதிகாரிகள், அதை சிறந்த நூலாக தேர்வு செய்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நூலகங்களிலும் வாசகர்கள் படிப்பதற்கு ஏற்பாடு செய்தனர். இந்நிலையில், தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் தமிழ் ஆர்வலர்களின் தமிழ்தொண்டை பெருமைப்படுத்தும் வகையில், தமிழ் வளர்ச்சித்துறை தமிழ்ச்செம்மல் விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதுக்கு பரணிராஜா, விண்ணப்பம் அளித்தார்.

இவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள், தமிழ்ச்செம்மல் விருந்துக்கு தேர்வு செய்தனர். சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழ் வளர்ச்சி துறை, செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், பரணிராஜாவுக்கு தமிழ்ச்செம்மல் விருதை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

The post நாமக்கல் நூலாசிரியருக்கு தமிழ்ச்செம்மல் விருது appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Bharaniraja ,Poiyerikarai ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டத்தில்...